Sunday, 27 March 2011

அன்புடன் அழைக்கிறோம்...

எங்கள் ழ பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..




Wednesday, 23 March 2011

’ழ’ பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் சிறப்புக் கழிவில்...

1) மீண்டும் ஒரு காதல் கதை- சங்கர் நாராயண்- 90
கொத்து பரோட்டா- சங்கர் நாராயண்-70
பணம்-கே.ஆர்.பி. செந்தில்- 90
வீணையடி நீ எனக்கு-என்.உலக நாதன் - 90
சாமானியனின் கதை- என்.உலகநாதன் - 90

90+90+90+90+70 = 430
பதினைந்து சதவிகிதம் கழிவு -64.50  ரூபாய் - 365

தமிழ் நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாக ரூபாய். 50

2)மீண்டும் ஒரு காதல் கதை- சங்கர் நாராயண்- 90
கொத்து பரோட்டா- சங்கர் நாராயண்-70
பணம்-கே.ஆர்.பி. செந்தில்- 90

90+90+70=250
பத்து சதவிகிதம் கழிவு- 25 ரூபாய். 225
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

3)வீணையடி நீ எனக்கு-என்.உலக நாதன் - 90
சாமானியனின் கதை- என்.உலகநாதன் - 90
90+90=180
பத்து சதவிகித கழிவு 18 ரூபாய் 162 ரூபாய்
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

4)கொத்து பரோட்டா + வீணையடி நீ எனக்கு + பணம்
70+90+90 =250
10% -25=225
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

5) மீண்டும் ஒரு காதல் கதை+ பணம்+ சாமானியனின் கதை
90+90+90 =270
10%-27 -243
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

6)பணம்+ வீணையடி நீ எனக்கு + கொத்து பரோட்டா
90+90+70 -250
10%-225
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

சங்கர் நாராயண் புத்தகங்கள்
1)
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்.. சிறுகதைகள்
2) சினிமா வியாபாரம் 
3)
மீண்டும் ஒரு காதல் கதை - குறுநாவலும், 22 சிறுகதைகளும்
4)
கொத்து பரோட்டா
50+90+90+70 =300
10% கழிவு -30-270
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.50

மொத்தமாக இல்லாமல் ஒவ்வொரு புத்தகம் தனியாய் வாங்கினாலும் பத்து சதம் தள்ளுபடியுடன் தமிழ்நாட்டிற்குள் அஞ்சல் இலவசம். வெளி மாநிலத்தவர்களுக்கு ரூ.30 மேற்படி.

உங்கள் ஆர்டர்களுக்கான பணத்தை அனுப்ப..

Sanswas Infotech
A/c No. 007705010890
KK nagar branch, ICICI BANK
 என்கிற அக்கவுண்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டு..  zha2011@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு உங்களது விலாசத்தையும் பணம் அனுப்பிய விவரங்களையும் தெரிவிக்கவும். 

Saturday, 19 March 2011

ழ பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

ழ பதிப்பகத்தில் இருந்து வரும் வாரம் நான்கு புதிய புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்..

1. சாமானியனின் கதை, ஆசிரியர் திரு.உலகநாதன் அவர்கள்.

2. வீணையடி நீ எனக்கு, ஆசிரியர் திரு.உலகநாதன் அவர்கள்.

3.பணம், ஆசிரியர், திரு.கே.ஆர்.பி.செந்தில்

4. கொத்து பரோட்டா, திரு.சங்கர் நாரயண் (கேபிள் சங்கர்)

எங்களது முந்தைய படைப்பான ‘சங்கர் நாராயண்’ அவரகள் எழுதிய “மீண்டும் ஒரு காதல் கதை” க்கு நீங்கள் தந்த அதே ஆதரவை இந்த படைப்புகளுக்கும் தருமாறு வேண்டுகோள் வைக்கிறோம்..






"ழ" என்கிற கனவின் விதை

இளமை எனும் வாழ்வின் வஸந்தபருவத்தில் ஒவ்வொருவருமே கண்கள் முழுக்க கனவுகள் நிரப்பித்தான் திரிவார்கள். காதலைச் சுமந்த கனவுகள், வாழ்க்கையைச் சுமந்த கனவுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கனவுகள்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதக்கனவு. வர்ணங்களில் மின்னும் கனவுகள் காலவெள்ளத்தில் சாயமிழந்து கறுப்புவெள்ளையாய்த் தேய்ந்துபோவதுதான் பெரும்பான்மையாக இருக்கின்றது. "எனக்கு ஒரு கனவு இருக்கின்றது" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகம் போலவே எங்களுக்கும் ஒரு கனவு இருந்தது. புதிய யுகத்துக்கான மகரந்தங்களைச் சுமந்து வரும் ஒரு பத்திரிகைப்பூவை முகிழ்க்கவைப்பதே அந்தக் கனவு.வாழ்வின் லட்சியங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் இதுவும் வெறும் கனவாகத்தான் போய்விடுமோ எனக்கவலை கொண்ட பொழுதில் நாம் ஏன் ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். அதுபற்றி விசாரித்தால் அது தமிழ் கூறும் நல்லுலகில் தற்கொலைக்குச் சமமான விசயம் என எச்சரித்தபோது எங்களுக்கு இதன் மேலிருந்த சுவாரசியம் கூடிப்போனது. இங்கு நாங்கள் என்பது நானும் என் மாப்பிள்ளையும் பதிவரும் ஆன தஞ்சாவூரான் என்கிற ராஜாவும். 

எனவே நெருங்கிய நண்பர்களான கேபிளையும், விந்தைமனிதனையும்கூப்பிட்டுப் பேசியதில் அவர்கள் தந்த உற்சாகத்தால் நாங்களும் பதிப்பகத் தொழிலில் இறங்கிவிட்டோம். எங்கள் பதிப்பகம் என்ற விதையின் முதல் தளிராக கேபிள்சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை" என்கிற குறுநாவலையும் அத்துடன் அவரின்  22 சிறுகதைகளையும் சேர்த்து முதல் புத்தகமாக வெளியிட இருக்கிறோம். எங்களின் அடுத்த வெளியீடு எனது "பணம்" தொடர். இதில் மிகுந்த மகிழ்ச்சியான விசயமே முதல் புத்தகம் "மீண்டும் ஒரு காதல் கதை" அச்சில் இருக்கும்போதே நூறு புத்தகங்களுக்கான ஆர்டர் கிடைத்து விட்டதுதான்.

கூடிய விரைவில் எங்களின் முதல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பை எல்லோருக்கும் அனுப்புகிறோம். பதிவுலக நண்பர்களின் எழுத்துக்கு முன்னுரிமை தரலாம் என்றிருக்கிறோம். எனவே பதிவுலக நண்பர்கள் தங்கள் படைப்புகளை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட விரும்பினால் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் படைப்புகளை எங்களின் ஆசிரியர் குழுவினர் பரிசீலித்தபின் உங்கள் படைப்புகளைக்  கண்டிப்பாக பதிப்பிக்கிறோம்.


எங்களது ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள எங்களது நண்பர்கள் விந்தைமனிதன் என்கிற ராஜாராமனுக்கும், கேபிள்சங்கர்என்கிற சங்கர் நாராயணுக்கும் எங்களது நன்றிகள்..

நிறைய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். "ழ" என்கிற பெயரில் ஊன்றப்பட்டு அது தன் முதல் தளிரை முகிழ்க்கும் தருணத்தில் "ழ"வை நண்பர்களும் பதிவர்களுமான உங்களிடம் ஒப்படைக்கிறோம். இது கிளைவிரித்து விண்ணளக்கவும், வேர்பரப்பி மண் சிறக்கவும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.